3434கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி
      கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி
      வலவா தெய்வக் கோமானே
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
      மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன்
      அடிசேர் வண்ணம் அருளாயே             (2)