3435வண்ணம் மருள் கொள் அணி மேக
      வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
      அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
      அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
      அடியேற்கு ஆஆ என்னாயே             (3)