முகப்பு
தொடக்கம்
3438
எந்நாளே நாம் மண் அளந்த
இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள்
ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந் நான் எய்தி எந் நாள் உன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? (6)