3440நோலாது ஆற்றேன் உன பாதம்
      காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
      நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
      விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
      வந்தாய் போலே வாராயே             (8)