முகப்பு
தொடக்கம்
3440
நோலாது ஆற்றேன் உன பாதம்
காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
வந்தாய் போலே வாராயே (8)