3441வந்தாய் போலே வாராதாய்
      வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
      நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
      பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
      அகலகில்லேன் இறையுமே             (9)