3452குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன் குழியினில்
      வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள்கண்டாய்
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன
      செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே             (9)