3462 | கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும் அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே என்னும் எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும் செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே? (8) |
|