3466வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி
      தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்
      என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்?
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த
      வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும்
      அறா திருப்பேரெயில் சேர்வன் நானே             (1)