3502எங்குத் தலைப்பெய்வன் நான் எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெம் கதிர் வச்சிரக் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ;
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே?            (4)