3528என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா?
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை
முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே             (8)