3545கூடும் கொல் வைகலும்? கோவிந்தனை
      மதுசூதனை கோளரியை
ஆடும் பறவைமிசைக் கண்டு கைதொழுது
      அன்றி அவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து
      ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ
      வாய்க்கும்கொல் நிச்சலுமே?             (3)