3547மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்
      இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன்
      அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு
      மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம்மேல் வினை
      ஒன்றும் நில்லா கெடுமே.             (5)