முகப்பு
தொடக்கம்
3559
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?
ஏழ் உலகங்களும் நீயே
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே
அவற்று அவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்
அவையுமோ நீ இன்னே ஆனால்
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே
வான் புலன் இறந்ததும் நீயே (6)