3570 | தொல்லை அம் சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று இமையோர் தமக்கும் எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும் அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான் அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர்! வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே (6) |
|