3571 | மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் என்னுடைத் தோழியர்காள் என் செய்கேன்? காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே (7) |
|