3573காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை
      கைசெய் அப்பாலது ஓர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
      மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
      தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
      என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்?             (9)