359நா அகாரியம் சொல் இலாதவர்
      நாள்தொறும் விருந்து ஓம்புவார்
தேவ காரியம் செய்து வேதம்
      பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர்காரியமும் திருத்தும்
      முதல்வனைச் சிந்தியாத அப்
பாவகாரிகளைப் படைத்தவன்
      எங்ஙனம் படைத்தான் கொலோ             (1)