3593திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
      கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
      செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல உந்தியும் செய்ய
      கமலை மார்பும் செய்ய உடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
      திகழ என் சிந்தையுளானே             (7)