முகப்பு
தொடக்கம்
3599
காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால்
இரங்கி ஒருநாள் நீ அந்தோ
காண வாராய்! கரு நாயிறு
உதிக்கும் கரு மா மாணிக்க
நாள் நல் மலைபோல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி அம்மானே! (2)