3601தூ நீர் முகில் போல் தோன்றும் நின்
      சுடர் கொள் வடிவும் கனிவாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
      வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலைதன்மேல்
      வண் கார் நீல முகில் போல
தூ நீர்க் கடலுள் துயில்வானே
      எந்தாய்! சொல்லமாட்டேனே             (4)