3604வந்து தோன்றாய் அன்றேல் உன்
      வையம் தாய மலர் அடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
      முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
      சிவந்த வாய் ஓர் கரு நாயிறு
அந்தம் இல்லாக் கதிர் பரப்பி
      அலர்ந்தது ஒக்கும் அம்மானே             (7)