3606இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
      படையாய் ஏறும் இரும் சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே
      என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
      இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தர
      மதுரைப் பிறந்த மாயனே?             (9)