361வண்ண நல் மணியும் மரகதமும்
      அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
      மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
      போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
      கவளம் உந்துகின்றார்களே             (3)