363ஆமையின் முதுகத்திடைக் குதி
      கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
      யாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
      நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
      வாங்கிப் புல்லைத் திணிமினே             (5)