முகப்பு
தொடக்கம்
363
ஆமையின் முதுகத்திடைக் குதி
கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
யாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே (5)