முகப்பு
தொடக்கம்
3633
உணர்வில் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
யானும் தானாய் ஒழிந்தானே. (3)