3633உணர்வில் உம்பர் ஒருவனை
      அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்
      அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
      மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
      யானும் தானாய் ஒழிந்தானே.             (3)