3634யானும் தானாய் ஒழிந்தானை
      யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
      ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
      அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
      நின்ற ஒன்றை உணர்ந்தேனே             (4)