3636நன்றாய் ஞானம் கடந்துபோய்
      நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
      உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள்
      செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு
      அதுவே வீடு வீடாமே             (6)