3638எய்த்தார் எய்த்தார் எய்த்தார்
      என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம்
      போகும்போது உன்மத்தர்போல்
பித்தே ஏறி அநுராகம்
      பொழியும்போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உள்ளம்
      கூடக் கூடிற்றாகில் நல் உறைப்பே             (8)