364பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
      புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையி
      னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று
      ஏத்துவார்கள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்
      உலகம் பாக்கியம் செய்ததே             (6)