3653நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
      அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும்
      தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
      அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ!
      வியன் மூவுலகு பெறினுமே?             (1)