3654வியன் மூவுலகு பெறினும் போய்
      தானே தானே ஆனாலும்
புயல் மேகம்போல் திருமேனி
      அம்மான் புனை பூம் கழல் அடிக்கீழ்ச்
சயமே அடிமை தலைநின்றார்
      திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
      உறுமோ பாவியேனுக்கே?             (2)