3683வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து
      இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிர
      புது மலர் ஆகத்தைப் பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும்
      செழும் பனைத் திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
      கொடுவினைப் படைகள் வல்லானே             (9)