370ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி
      அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாள் என்று மயங்கி
      மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும்
      கேழல் ஆகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை
      பேசுவான் புகில் நம் பரம் அன்றே             (1)