373மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
      மேல் மிடற்றினை உள் எழ வாங்கிக்
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்
      கண் உறக்கமது ஆவதன் முன்னம்
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை
      மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்
      விண்ணகத்தினில் மேவலும் ஆமே             (4)