374மடி வழி வந்து நீர் புலன்சோர
      வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்
      கண் உறக்கமது ஆவதன் முன்னம்
தொடை வழி உம்மை நாய்கள் கவரா
      சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்
      இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே             (5)