379செத்துப் போவதோர் போது நினைந்து
      செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்
      பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்
      செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல்
      சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே             (10)