3802வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
      வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண் இணை முத்தம் சோர
      துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல
      வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
      அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?            (7)