3803அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று
      ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து
      கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
      கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ
      உகக்கும் நல்லவரொடும் உழிதராயே             (8)