நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏர் ஆர் சிவன் பிறந்தான் என்னும் சொல் சீர் ஆர்
மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே மொய் பூ
மழிசைப்பரன் அடியே வாழ்த்து