சீர் ஆர் திரு எழுகூற்றிருக்கை என்னும் செந்தமிழால்
ஆரா - அமுதன் குடந்தைப் பிரான் - தன் அடி- இணைக்கீழ்
ஏர் ஆர் மறைப்பொருள் எல்லாம் எடுத்து இவ் உலகு உய்யவே
சோராமல் சொன்ன அருள்-மாரி பாதம் துணை நமக்கே