மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் தனத்தாலும்
ஏதும் குறைவு இலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று