முகப்பு
தொடக்கம்
402
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த
பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து
ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்
வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ்
திருவரங்கம் என்பதுவே (2)