402பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த
      பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து
      ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்
      வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ்
      திருவரங்கம் என்பதுவே             (2)