முகப்பு
தொடக்கம்
404
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்
கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக்
கண்டகரைக் களைந்தான் ஊர்
தேன்தொடுத்த மலர்ச் சோலைத்
திருவரங்கம் என்பதுவே (4)