404கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்
      கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும்
      இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக்
      கண்டகரைக் களைந்தான் ஊர்
தேன்தொடுத்த மலர்ச் சோலைத்
      திருவரங்கம் என்பதுவே             (4)