406கீழ் உலகில் அசுரர்களைக்
      கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
      கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்
      தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
      ஆளம் வைக்கும் அரங்கமே             (6)