408வல் எயிற்றுக் கேழலுமாய்
      வாள்எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும்
      அவுணனையும் இடந்தான் ஊர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு
      எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும்
      மதில் அரங்கம் என்பதுவே             (8)