421கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
      கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
      திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
      உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
      இருப்பர் தாமே            (11)