424எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
      எற்றி நமன்-தமர் பற்றும்போது
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை
      நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
      சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (3)