425ஒற்றை விடையனும் நான்முகனும்
      உன்னை அறியாப் பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி
      மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி
      அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற
அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (4)