428செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற
      தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடை இன் அமுதே
      ஏழ் உலகும் உடையாய் என் அப்பா
வஞ்ச உருவின் நமன்தமர்கள்
      வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது
அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே            (7)