429நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன்
      நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே என்று மோதும்போது அங்கு
      உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன்
வான் ஏய வானவர் தங்கள் ஈசா
      மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும்
      அரங்கத்து அரவணைப் பள்ளியானே             (8)